கேள்வி - கண் திருஷ்டி உண்மையா? இதை நம்பலாமா? இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருந்தாலும் 9:51 வசனத்துடன் இது மோதுகின்றதே! விளக்கவும். - ஷாஜஹான், தஞ்சை
பதில் - "கண் திருஷ்டி என்பது உண்மையே'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மேலும் பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 5740, 5944
கண் திருஷ்டி உண்மை என்று பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அல்குர்ஆன் 9:51 வசனத்திற்கு முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் நிராகரிக்க முடியாது. இரண்டையும் இணைத்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
ஒரு பணக்காரர் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து விருந்து வைக்கின்றார். பக்கத்து வீட்டில் ஒருவர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்கின்றார் என்றால் இவரது ஏக்கத்தின் காரணமாக இறைவன் அந்தப் பணக்காரருக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றான் என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.
இது போல் பொறாமை உணர்வோடு சிலர் பார்ப்பது சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன் 113:5)
பொறாமைப்படும் போது ஏற்படும் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுமாறு இவ்வசனம் கூறுவதிலிருந்து பொறாமையின் மூலமும் தீங்கு ஏற்படும் என்பதை அறிய முடிகின்றது.
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)
எது நடந்தாலும் அது இறைவனின் விதிப்படியே நடக்கிறது என்பது தான் இந்த வசனத்தின் கருத்து! இந்த வசனத்தின் அடிப்படையில் ஒன்று, கண் திருஷ்டியால் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று விளங்கலாம். அல்லது கண் திருஷ்டியால் தீங்கு ஏற்படுமாறு அல்லாஹ் விதித்திருக்கின்றான் என்று விளங்கலாம்.
இந்த இரண்டு கருத்துக்களில் முதல் கருத்தை எடுத்துக் கொண்டால் ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டியிருப்பதால் இரண்டாவது கருத்தை எடுத்துக் கொண்டால் எவ்வித முரண்பாடு ஏற்படாது.
கண் திருஷ்டி உண்மை என்று பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அல்குர்ஆன் 9:51 வசனத்திற்கு முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் நிராகரிக்க முடியாது. இரண்டையும் இணைத்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
ஒரு பணக்காரர் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து விருந்து வைக்கின்றார். பக்கத்து வீட்டில் ஒருவர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்கின்றார் என்றால் இவரது ஏக்கத்தின் காரணமாக இறைவன் அந்தப் பணக்காரருக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றான் என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.
இது போல் பொறாமை உணர்வோடு சிலர் பார்ப்பது சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன் 113:5)
பொறாமைப்படும் போது ஏற்படும் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுமாறு இவ்வசனம் கூறுவதிலிருந்து பொறாமையின் மூலமும் தீங்கு ஏற்படும் என்பதை அறிய முடிகின்றது.
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)
எது நடந்தாலும் அது இறைவனின் விதிப்படியே நடக்கிறது என்பது தான் இந்த வசனத்தின் கருத்து! இந்த வசனத்தின் அடிப்படையில் ஒன்று, கண் திருஷ்டியால் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று விளங்கலாம். அல்லது கண் திருஷ்டியால் தீங்கு ஏற்படுமாறு அல்லாஹ் விதித்திருக்கின்றான் என்று விளங்கலாம்.
இந்த இரண்டு கருத்துக்களில் முதல் கருத்தை எடுத்துக் கொண்டால் ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டியிருப்பதால் இரண்டாவது கருத்தை எடுத்துக் கொண்டால் எவ்வித முரண்பாடு ஏற்படாது.
- பி.ஜே
0 comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...