Tuesday, February 7, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 1

முன்னுரை

இன்றைய உலகில் இஸ்லாமும் இன்னபிற மதங்களும் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இஸ்லாத்தைத் தவிர்த்து எந்த ஒரு மதத்தின் கொள்கையும் கோட்பாடுகளும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கக்கூடியதாக இல்லை.

மனிதர்களால் சுயமாக கண்டுபிடிக்க இயலாத விஷயங்களில் சுய சிந்தனைகளையும் கற்பனைகளையும் ஒருவர் புகுத்தினால் இம்மதங்களை கடைபிடிப்பவர்கள் யாரும் இதை எதிர்ப்பதில்லை. குறிப்பாக இக்கற்பனைகள் தங்களது மதத்தின் மீது பக்தியையும் பற்றையும் ஏற்படுத்துவதற்கு உதவினால் கண்மூடிக்கொண்டு ஆதரவளிக்க இவர்கள் முன்வருகிறார்கள்.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் குறிப்பிட்ட எல்லைக்குள் வறையறுக்கப்பட்டுவிட்டது. மனிதர்களின் கற்பனைகளும் சுய சிந்தனைகளும் இதில் நுழைந்து விடாமல் இருக்க வலுமையான தடுப்பை திருக்குர்ஆன் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய சட்டதிட்டங்களாக இருந்தாலும் கொள்கை கோட்பாடுகளாக இருந்தாலும் இவற்றை வகுத்துக் கூறும் அதிகாரத்தை இறைவன் தன்வசம் மட்டுமே வைத்துள்ளான். இந்த அதிகாரத்தை கையில் எடுக்க யாருக்கும் எள்ளளவு கூட அனுமதியில்லை.


கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அல்குர்ஆன் (39 : 3)

இந்த அடிப்பைடையை முஸ்லிம்களில் பலர் புரிந்துகொள்ளாத காரணத்தால் இஸ்லாத்தில் சொல்லப்படாத இஸ்லாத்திற்கு மாற்றமான பல விஷயங்கள் மாற்றார்களிடமிருந்து இவர்களுக்கு தொற்றிக்கொண்டுவிட்டது. 
உதாரணமாக ஜின்கள் மற்றும் ஷைத்தான்கள் விஷயத்தில் பல விதமான தவறான நம்பிக்கைகள் நம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

ஜின்களும் ஷைத்தான்களும் மனிதக் கண்களுக்குப் புலப்படாத மறைமுகமான படைப்பாகும். இவர்களைப் பற்றி நம்முடைய சுய அறிவைக் கொண்டு ஆராய்ந்து கூற இயலாது. அப்படிக்கூறினால் நிச்சயமாக அது வழிகேட்டில் தான் கொண்டு போய்விடும்.

மனித அறிவிற்குப் புலப்படாத விஷயங்களை அறிந்துகொள்வதாக இருந்தால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலமே அறிந்துகொள்ள முடியும். இவ்விரண்டையும் தவிர்த்து வேறு எதன் மூலமும் யார் மூலமும் இது தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்ள இயலாது.

ஜின்களையும் ஷைத்தான்களையும் பற்றி குர்ஆனும் ஹதீஸ்களும் தெளிவாக விளக்குகிறது.

இந்த விளக்கங்களை அறிந்து கொண்டால் தவறான நம்பிக்கைகளில் நம் சமூகம் நிச்சயம் விழாது. உலக மக்களின் எதிரியான ஷைத்தானைப் பற்றி விபரமாக அறிந்து அவனது சதி வலையில் விழாமல் நம்மை நாம் காத்துக்கொண்டால் இறைவனுடைய கோபம் நம்மீது ஏற்படாது.

மக்கள் இவைகளை அறிந்து நல்வழியில் செல்வதற்காக குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜின்களையும் ஷைத்தான்களையும் பற்றி விவரிக்கும் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் தவறுகள் ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறோம்.


இப்படிக்கு
அப்பாஸ் அலீ

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner