இவ்வசனங்களில் (5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 11:69, 16:5, 16:14, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:26)
உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த
அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச்
சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி
என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர் வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர் வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர் வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர் வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துவது உயிர் வதையா? இல்லையா?
கன்றுகளுக்காக தாய்ப் பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துவது உயிர் வதையா? இல்லையா?
இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே! அப்படியானால் தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர் வதை இல்லையா?
மனிதன் அருந்துகின்ற தண்ணீ ரிலும் கோடிக் கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர் வதையா? இல்லையா?
கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுய நலத்திற்காகக் கொல்வது உயிர் வதையா? இல்லையா?
கன்றுகளுக்காக தாய்ப் பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துவது உயிர் வதையா? இல்லையா?
இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே! அப்படியானால் தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர் வதை இல்லையா?
மனிதன் அருந்துகின்ற தண்ணீ ரிலும் கோடிக் கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர் வதையா? இல்லையா?
கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுய நலத்திற்காகக் கொல்வது உயிர் வதையா? இல்லையா?
உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர் வதை இருக்கிறதே என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர் வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?
மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?
இவ்வாறு தவிர்ப்பவர்கள் கண் பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணையால் செய்யப்பட்ட மாத்திரைகளை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது.
இது போன்ற கேள்விகளைச் சிந்தித்தால் தனது நன்மைக்காக மனிதன் அல்லாத பிற உயிரினங்களை வதைப்பதையும், கொல்வதையும் மனிதனின் உள் மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம். போலித் தனமாகவே, முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவே உயிர் வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.