அடுத்து இன்னொரு செய்தியைப் பாருங்கள்.
குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2876)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ஒரு வசனம் திருக்குர்ஆனில் இருந்தது என்று ஆயிஷா (ரலி) கூறியதாக இந்தச் செய்தி கூறுகிறது.
நபியவர்கள் மரணிக்கும் வரை திருக்குர்ஆனில் இப்படி ஒருவசனம் இருந்திருந்தால் இப்போதும் அந்த வசனம் திருக்குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு வசனம் திருக்குர்ஆனில் இல்லை.
இதிலிருந்து தெரிவது என்ன? நபியவர்கள் காலத்தில் ஓதப்பட்டு வந்த வசனம் அதன் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்தைத் தான் இது தருகிறது.
திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை அல்லாஹ் நபி அவர்கள் மூலமாக மாற்றுவானே தவிர, வேறு யாரும் மாற்ற முடியாது.
இப்போதுள்ள எந்த ஒரு குர்ஆனிலும் இது போன்ற ஒரு வசனம் கிடையாது. அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்ட்ட உஸ்மான் (ரலி) அவர்களின் குர்ஆன் பிரதியிலும் இது போன்ற வசனம் கிடையாது.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
திருக்குர் ஆன் 15:9
அல்லாஹ் திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று இருக்கும் போது திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற கருத்தைத் தரும் இந்தச் செய்தி கட்டுக் கதையாகத் தான் இருக்க முடியும். இந்தச் செய்தியை நம்பினால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று நம்புவதாக ஆகும்..
ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ள அறிவிப்பாளரின் வரிசை மட்டும் சரியாக இருப்பது போதாது. அது குர்ஆனுடன் மோதாமலும் இருக்க வேண்டும்.
இது போன்ற ஹதீஸ்களை ஏன் நம்பவில்லை என்று அல்லாஹ் மறுமையில் கேட்டால், குர்ஆனைப் பாதுகாப்பதாக நீ சொல்லிருக்கின்றாய். இது குர்ஆனுக்கு முரண்படுகின்றது அதனால் நம்பவில்லை என்று சொல்லிவிடலாம்.
இது போன்ற ஹதீஸ்களை நம்புபவர்களை அல்லாஹ் இந்த ஹதீஸ்களை ஏன் நம்பினீர்கள் என்று கேட்டால் இது அறிவிப்பாளர் சரியாக இருந்தார்கள். புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று சொன்னால் ஏற்பானா? எனது வசனம் பாதுகாக்கப்படவில்லை என்று எப்படி நீ நம்பினாய் என்று கேட்கமாட்டானா?
இந்த ஹதீஸ்களைக் கூறி மக்களைக் குழப்பியது போல் அல்லாஹ்வை குழப்பமுடியுமா?
இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் ஹதீஸையும் பாருங்கள்!
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறை வழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் , இன்ஷா அல்லாஹ்-இறைவன் நாடினால் என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், இன்ஷா அல்லாஹ்' என்று கூறவில்லை; மறந்து விட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார்.
புகாரி : 5242
ஒரே இரவில் நூறு மனைவியிடத்தில் சேருவதற்கு சக்தி உள்ளதா? இல்லையா? என்பது வேறு விஷயம்.
ஈமானைப் பாதிக்கும் அம்சத்தைப் பற்றி மட்டும் சுட்டிக் காட்டுகின்றேன்.
ஒரு நபி மறைவான விஷயங்களைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காமல் பேசக் கூடாது. அல்லாஹ் அறிவிக்காமல் மறைவான விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாது.
நூறு குழந்தைகளைப் பெற்றெடுப்பேன் என்று சுலைமான் நபி வஹியைக் கொண்டு சொல்லவில்லை. வஹியைக் கொண்டு சொல்லியிருந்தால் நூறு குழந்தை பெற்றிருப்பார்கள்.
குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2876)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ஒரு வசனம் திருக்குர்ஆனில் இருந்தது என்று ஆயிஷா (ரலி) கூறியதாக இந்தச் செய்தி கூறுகிறது.
நபியவர்கள் மரணிக்கும் வரை திருக்குர்ஆனில் இப்படி ஒருவசனம் இருந்திருந்தால் இப்போதும் அந்த வசனம் திருக்குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு வசனம் திருக்குர்ஆனில் இல்லை.
இதிலிருந்து தெரிவது என்ன? நபியவர்கள் காலத்தில் ஓதப்பட்டு வந்த வசனம் அதன் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்தைத் தான் இது தருகிறது.
திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை அல்லாஹ் நபி அவர்கள் மூலமாக மாற்றுவானே தவிர, வேறு யாரும் மாற்ற முடியாது.
இப்போதுள்ள எந்த ஒரு குர்ஆனிலும் இது போன்ற ஒரு வசனம் கிடையாது. அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்ட்ட உஸ்மான் (ரலி) அவர்களின் குர்ஆன் பிரதியிலும் இது போன்ற வசனம் கிடையாது.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
திருக்குர் ஆன் 15:9
அல்லாஹ் திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று இருக்கும் போது திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற கருத்தைத் தரும் இந்தச் செய்தி கட்டுக் கதையாகத் தான் இருக்க முடியும். இந்தச் செய்தியை நம்பினால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று நம்புவதாக ஆகும்..
ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ள அறிவிப்பாளரின் வரிசை மட்டும் சரியாக இருப்பது போதாது. அது குர்ஆனுடன் மோதாமலும் இருக்க வேண்டும்.
இது போன்ற ஹதீஸ்களை ஏன் நம்பவில்லை என்று அல்லாஹ் மறுமையில் கேட்டால், குர்ஆனைப் பாதுகாப்பதாக நீ சொல்லிருக்கின்றாய். இது குர்ஆனுக்கு முரண்படுகின்றது அதனால் நம்பவில்லை என்று சொல்லிவிடலாம்.
இது போன்ற ஹதீஸ்களை நம்புபவர்களை அல்லாஹ் இந்த ஹதீஸ்களை ஏன் நம்பினீர்கள் என்று கேட்டால் இது அறிவிப்பாளர் சரியாக இருந்தார்கள். புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று சொன்னால் ஏற்பானா? எனது வசனம் பாதுகாக்கப்படவில்லை என்று எப்படி நீ நம்பினாய் என்று கேட்கமாட்டானா?
இந்த ஹதீஸ்களைக் கூறி மக்களைக் குழப்பியது போல் அல்லாஹ்வை குழப்பமுடியுமா?
இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் ஹதீஸையும் பாருங்கள்!
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறை வழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் , இன்ஷா அல்லாஹ்-இறைவன் நாடினால் என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், இன்ஷா அல்லாஹ்' என்று கூறவில்லை; மறந்து விட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார்.
புகாரி : 5242
ஒரே இரவில் நூறு மனைவியிடத்தில் சேருவதற்கு சக்தி உள்ளதா? இல்லையா? என்பது வேறு விஷயம்.
ஈமானைப் பாதிக்கும் அம்சத்தைப் பற்றி மட்டும் சுட்டிக் காட்டுகின்றேன்.
ஒரு நபி மறைவான விஷயங்களைப் பற்றி அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காமல் பேசக் கூடாது. அல்லாஹ் அறிவிக்காமல் மறைவான விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாது.
நூறு குழந்தைகளைப் பெற்றெடுப்பேன் என்று சுலைமான் நபி வஹியைக் கொண்டு சொல்லவில்லை. வஹியைக் கொண்டு சொல்லியிருந்தால் நூறு குழந்தை பெற்றிருப்பார்கள்.