Wednesday, February 22, 2017

பூமியில் தான் வாழ முடியும்

பூமியில் தான் வாழ முடியும்

- பி.ஜே வருமுன் உரைத்த இஸ்லாம் நூலிலிருந்து....

நாம் வாழ்கின்ற பூமியைப் போலவே இன்னும் பல கோள்கள் இருப்பதையும், பூமியைப் போலவே அவை சுற்றிச் சுழல்வதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. விண்வெளிப் பயணம் கூட சாத்தியம் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனாலும் பூமியில் தான் மனிதன் வாழ முடியும்; வேறு எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

'உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன' என்றும் கூறினோம். திருக்குர்ஆன் : 2:36

'உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன' என்று (இறைவன்) கூறினான். திருக்குர்ஆன் 7:24


'அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே

Monday, February 6, 2017

அலட்சியத்தால் ஏற்படும் குழப்பங்கள்



- ஏகத்துவ இதழ் கட்டுரை

இரண்டாம் ஆண்டு மாணவியர் (கும்பகோணம் அந்நூர் மதரஸா)


குழப்பங்கள் சூழ்ந்த காலம் என நம்முடைய மார்க்கம் எதை எச்சரித்ததோ அத்தகைய காலத்தில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

நமக்கு முந்தயை சமுதாயங்கள் எந்தெந்த பாவங்களுக்காக அழிக்கப்பட்டதோ அந்தப் பாவங்கள் அனைத்தும் நம்முடைய சமுதாயத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி, சமூகம் உட்பட என அனைத்து விஷயங்களிலும் நாம் குழப்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.

எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டாலும் ஓர் இறை நம்பிக்கையாளன் அந்தக் குழப்பங்களிலிருந்து தனது ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள அதிலிருந்து விலகிவிட வேண்டும்.

ஆனால், நம்மில் பலர் ஈமானுக்கு ஊறு விளைவிக்கும் அந்த ஃபித்னாக்களின் விஷயத்தில் அசட்டையாக இருக்கின்றோம்.

குழப்பங்களைக் குறித்து நபிகளாரின் எச்சரிக்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மிடையே குழப்பங்கள் மழைத் துளியைப் போல் வந்தடையும் என்று எச்சரித்துள்ளார்கள்.
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner